Tuesday, July 27, 2021

கட்டுரை := நான் மருத்துவரானால்

👩‍⚕️👨‍⚕️நான் மருத்துவரானால் 👩‍⚕️👨‍⚕️





 மனிதன் மகிழ்ச்சியாக வாழப் பிறந்தவன்.  அவன் துன்பங்களின் சுமையாலியாக மாறக்கூடாது. அவனுக்கு வேண்டியது குறைவற்ற செல்வம் ஆகிய நோயற்ற வாழ்வே ஆகும். அவன் மருத்துவமனைகளில் நெருங்கிய வாடிக்கையாளராக மாறிவிடக்கூடாது. நான் மருத்துவரானால் நோயற்று வாழ்வு வழிமுறைகளை மக்களுக்கு எடுத்துக் கூறுவேன். அதன் மூலம் சமுதாயத்தில் பேரன்பும் பெருமதிப்பும் உரியவனாவேன்.    நோய்களை பெருக்கி சிகிச்சை அளிக்கும் நிலையினை மாற்ற முயல்வேன். நோய்கள் பிரவா வண்ணம் வாழும் நெறிகளை மக்களுக்கு எடுத்துரைப்பேன். நாட்டில் பிரசாரத்தால் நோய்களை குறைத்திட வேண்டும் என்பதே என் குறிக்கோள். பிரசாரத்தால் மட்டும் இது சாத்தியப்படாது. சுகாதார விதிகளையும் மீறி சில நோய்கள் காரணம் அறியமுடியாமல் ஏற்பட்டு விடுவதும் உண்டு. எடுத்துக்காட்டாகப் புற்றுநோயை குறிப்பிடலாம். இத்தகைய நோய்களுக்கு சிகிச்சை அளித்தல் வேண்டும். இதுவும் என் கடமை ஆகும். என் மருத்துவப் படிப்பு  பயன்பட வேண்டும். எனவே என் பணிகளை ஒரு வகையில் ஆற்றிட முயற்படுவேன். ஒன்று அறிவுப் பணி. மற்றையது ஆக்கப் பணி. நான் அறிவாலும் தொண்டு செய்வேன். நான் நோயாளிகளுடன் அன்புடன் அழைத்து மருந்து அளித்து அவர்களது நோய்களைக் குணமாக்க முற்படுவேன். இன்சொல் நல்ல மருத்துவம். நயமிகு கணிப்பு - இவையே  மருத்துவப் பணியின் ஆணிவேர் ஆகும்.



" நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பதை உணர்த்திடும் மக்கள் மருத்துவனாக நான் செயற்படுவேன்.  

கட்டுரை := நான் ஒரு உடைந்த பேனை

🖊️நான் ஒரு உடைந்த பேனை 🖊️ ‌ தம்பி என்னைதெரியவில்லையா? என்று ஒரு குரல் கேட்டது. எங்கள் வீட்டு மூலையில் இருந்து தான் இக்குரல் கேட்டது. திரும...