Thursday, July 22, 2021

தரம் 6,7,8,9 மாணவர்களுக்கான காட்டுரைகள் (நான் ஒரு பறவை யானால் )

🦜🦜 நான் பறவையானால்......🦜🦜




 நேற்று      பூந்தோட்டத்தில்    நீர்    ஊற்றிக் கொண்டிருந்தேன்.   அப்போது   ஒரு   அழகிய  கிளி   எங்கள்   முற்றத்து   மாமரத்தில்   வந்திருந்தது.   அதன்   அழகு   என்னை   பெரிதும் கவர்ந்தது.   அது   கீ.... கீ....  என்று  கீச்சிடுவதே   தனி   ஆனந்தம்.   இதைப்    போன்று   யானும்   ஒரு   பறவையானால்.  எவ்வளவு   ஆனந்தமாய் இருக்கும்  என்று   எண்ணினேன்.  என்   கற்பனை விரிந்தது.  


 நான்   ஒரு   பறவையானால்   வானவெளியில் சிறகுகளை   அகல   விரித்து   ஆனந்தமாய்  பறந்து செல்வேன்.  விரும்பிய   வேளைகளில்   விரும்பிய இடங்களில்   அமர்வேன்.  எவ்வித   கட்டுப்பாடும் எனக்கு   இருக்காது.    இந்த   உலகில்   மனிதர்கள் படும்   துன்பங்கள்   எதுவும்   என்னை   தொடாது.   சுதந்திரமாக  எங்கும்   பறந்து   செல்வேன்.  


 உயர்ந்த மலைகள்,   பச்சை   பசேலென   காட்சி   தரும்    வயல்வெளிகள்  , பழத்தோட்டங்கள்,   வானளாவிய மரங்கள்    அனைத்திலும்   நான்   சென்று   அமர்ந்து   ஆனந்தமடைவேன்.       உணவை   பற்றிய    கவலை   எனக்கில்லை.    எப்போது   நான் விரும்பிய  பழத்தை   உண்டு  மகிழ்வேன் .   குடிசைகளோ   எனக்குத்   தேவையில்லை     என்சகோதரர்களுடன்   உள்ளாசமாக மர   உச்சியில்   படுத்துறங்குவது.   அதிகாலை    வேளைகளில்    எழும்புவேன்.   ஆனாலும்   நான்   ஒரு   பறவையாகும்   ஆசைதான்    நிறைவேறவில்லையே !!! ☹️😔

No comments:

கட்டுரை := நான் ஒரு உடைந்த பேனை

🖊️நான் ஒரு உடைந்த பேனை 🖊️ ‌ தம்பி என்னைதெரியவில்லையா? என்று ஒரு குரல் கேட்டது. எங்கள் வீட்டு மூலையில் இருந்து தான் இக்குரல் கேட்டது. திரும...